திருச்சி: சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவானைக்காவலில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் காந்தி ரோடு சாலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள சாலையில் திடீரென பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டது. சாலைக்கு அடியே பாதாள சாக்கடை குழாய் வெடித்ததால் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் திருப்பிவிடப்பட்டன. 

varient
Night
Day