திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் கழக நிர்வாகிகள் புகார் அளித்து வருகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மாவுக்கு எல்லாமாக இருந்து கண்ணை இமை காப்பது போல காத்து வந்தவர் தான் புரட்சித்தாய் சின்னம்மா. தனக்கு பிறகும் 100 ஆண்டுகளுக்கு அஇஅதிமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசையை நிறைவேற்ற அயராது உழைத்துக்கொண்டிருப்பவர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள். அப்படிப்பட்டவரை பற்றி எந்த ஒரு தகுதியும், தராதரமும் இல்லாத திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரன், அவதூறாக பேசியிருப்பது கோடிக்கணக்கான அஇஅதிமுக தொண்டர்களை கொந்தளிக்க செய்துள்ளது.

இந்நிலையில் குடியாத்தம் குமரன் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை டிஜிபி அலுவலகம், நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர். அந்த வகையில் குடியாத்தம் குமரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்யக் கோரியும், சம்பந்தப்பட்ட வீடியோவை தடை செய்ய வலியுறுத்தியும், மதுரை மாநகர் மாவட்ட அஇஅதிமுக நிர்வாகி சுரேஷ் தலைமையில் ஏராளமான கழக தொண்டர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Night
Day