திண்டுக்கல் - உதயநிதி பிரச்சாரத்திற்கு டோக்கன் விநியோகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல்லில் அமைச்சர் உதயநிதி மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக பணம் டோக்கன்கள் விநியோகித்து மக்களை அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை ஆதரித்து திண்டுக்கல்லில் அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக வரவழைக்கப்பட்ட மக்களிடம், பணம் தருவதாக கூறி டோக்கன்களை திமுகவினர் விநியோகித்ததாக கூறப்படுகிறது. இதனை தேர்தல் அதிகாரிகள் தடுக்காமல் அலட்சிய போக்குடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.    

Night
Day