தமிழக மீனவர்கள் 21 பேரை கைது செய்த இலங்கை கடற்படை : எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்கள் 21 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்துள்ளது. மீனவர்களின் 2 விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, கைதான மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

Night
Day