தமிழகத்தில் பெய்து வரும் கனமழை... பல்வேறு அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக கன மழை பெய்து வருவதன் காரணமாக காரையார், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 143 அடி கொண்ட காரையார் அணை நீர்மட்டம் 89 புள்ளி 15 அடியிலிருந்து ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 94 புள்ளி 25 அடியை எட்டியுள்ளது. மேலும் அணைக்கான நீர்வரத்து 2 ஆயிரத்து 570 கன அடியில் இருந்து 4 ஆயிரத்து 810 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதே போன்று 143 அடி கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 105 புள்ளி 97 அடியிலிருந்து ஒரே நாளில் சுமார் 13 அடி உயர்ந்து 118 புள்ளி 93 அடியை எட்டியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் உடுமலை நீர்ப்பிடிப்பு பகுதிகளான பாம்பாறு, தூவானம், காந்தளூர், மறையூர் போன்ற பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்தது. இதனால் இன்று காலை 6 மணி நிலவரப்படி அமராவதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 6 கன அடியாக உள்ளது. 90 அடி உயரம் அமராவதி அணை நீர்மட்டம் நேற்று 51 புள்ளி 28 அடியாக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 57 புள்ளி 58 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளதால் பொதுப்பணித்துறையினர் சுழற்சி முறையில் தற்போது அணை நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர். 

Night
Day