தமிழகத்தில் குரூப் 1 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் குரூப் 1 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கு குரூப் 1 தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் 90 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, டிஎன்பிஎஸ்சி குரூப் 1-க்கு இன்று முதல் அடுத்த மாதம் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், முதல்நிலை தேர்வு வரும் ஜூலை 13ம் தேதி நடைபெறும் எனவும் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

Night
Day