ஜாபர் சாதிக் கூட்டாளி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மற்றும் திருச்சியில் குடோன்கள் வைத்து ராகி பவுடர் மூலம் போதை பொருட்கள் கடத்திய, திமுக பிரமுகர் ஜாபர் சாத்திக்கின் கூட்டாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது, போதை பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 50 கிலோ ரசாயன பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, ஏற்கனவே 3 பேர் கைது செய்த நிலையில், இதற்கு மூளையாகச் செயல்பட்ட திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர். 

இந்நிலையில், சென்னை மற்றும் திருச்சியில் குடோன்கள் வைத்து ராகி பவுடர் மூலம் போதை பொருட்கள் கடத்திய ஜாபர் சாத்திக்கின் கூட்டாளியான சதா ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

Night
Day