சேமியா உப்புமாவில் பல்லி : 13 குழந்தைகள் வாந்தி - மயக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசுப்பள்ளியில் பல்லி விழுந்த உணவை குழந்தைகள் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சமத்துவபுரம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் வழக்கம் போல் மாணவர்களுக்கு காலை உணவாக சேமியா உப்புமா வழங்கப்பட்டது. இதனை 13 மாணவர்கள் உட்கொண்ட நிலையில், உணவில் பல்லி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கும் பெரிய கொழப்பலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day