சென்னை: துணிக்கடை ஊழியர்களின் தங்கும் விடுதியில் பாய்லர் வெடித்து விபத்து - 4 ஊழியர்கள் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அருகே பள்ளிக்கரணையில் பிரபல துணிக்கடை ஊழியர்களின் தங்கும் விடுதியில் பாய்லர் வெடித்த விபத்தில் 4 பேர் காயடைந்தனர். பள்ளிகரணையில் பிரபல துணிக்கடையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதி மூன்றடுக்கு மாடியுடன் அமைந்துள்ளது. இன்று காலை  ஊழியர்களுக்கு உணவு தயாரிக்கும் பொழுது பாய்லர் அதிக சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் கட்டிட சுவர்கள் இடிந்து விழுந்ததில் ஊழியர்கள் 4 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற மேடவாக்கம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த நிலையில், பள்ளிகரணை போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day