சென்னை : 4-வது வாரமாக புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து - பொதுமக்கள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இன்று 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இன்று சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் 44 மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்களின் வசதிக்காக  150 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது. ஆனால், பெரும்பாலன மக்கள் போதிய பேருந்துகள் கிடைக்காமல் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Night
Day