சென்னை : விசாரணை நிறைவடைந்த நிலையில் டெல்லி அழைத்து செல்லப்பட்டார் திமுக பிரமுகர் ஜாபர் சாதீக்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்கிடம், 15 மணி நேரம் நடத்திய விசாரணை பின், போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சென்னையில் இருந்து மீண்டும் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.

2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் கடந்த 9-ம் தேதி போதைப்பொருள் கடத்தல் மன்னனும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். அவருக்கு வழங்கப்பட்ட போலீஸ் கஸ்டடியை மேலும் 3 நாட்கள் நீட்டித்து பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், போதை பொருள் தடுப்பு பிரிவினரால் சென்னை அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்கிடம், சென்னை அயப்பாக்கத்தில் உள்ள போதை பொருள் தடுப்பி பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 15 மணி நேர விசாரணைக்கு பின் சென்னையில் இருந்து மீண்டும் டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.

Night
Day