சென்னை : தங்கம் சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ரூ.48,120 என்ற புதிய உச்சத்தை தொட்டது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்து, 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் விலை உச்சம் தொட்டு வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

\தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களில் ஆயிரத்து 500 ரூபாய் வரை உயர்ந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 680 ரூபாய் உயர்ந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 48 ஆயிரத்து 120 ரூபாய்க்கும், கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் 20 காசுகள் உயர்ந்து 78 ரூபாய் 20 காசுகளுக்கும், கிலோவுக்கு ஆயிரத்து 200 ரூபாய் உயர்ந்து 78 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day