சென்னை : ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,640-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை, இன்று ஒரே நாளில் 280 ரூபாய் அதிகரித்து 53 ஆயிரத்து 640 ரூபாய்க்கும்,  கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 6 ஆயிரத்து 705 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை கிராம் 1 ரூபாய் உயர்ந்து 89 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து 89 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day