சென்னை - ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டட தொழிலாளி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் கடும் வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு கட்டுமான தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கம் காரணமாக ஒருசிலர் மயங்கி சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை பெரம்பூரை சேர்ந்த 25 வயதான சச்சின் என்ற இளைஞர், மீஞ்சூரில் கட்டட வேலை பார்த்து வந்தார். கடும் வெயிலில் பணிப்புரிந்து கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Night
Day