சென்னையில் 44 மின்சார ரயில்கள் சேவை இன்று முழுமையாக ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் 44 புறநகர் மின்சார ரயில் சேவை இன்று முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 

சென்னையில் மின்சார ரயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், பணிக்கு செல்வோர் என பல தரப்பினரும் பயணம் செய்து வருகின்றனர். இதனால், அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்தவகையில், கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

Night
Day