செந்தில் பாலாஜி மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கி சார்பில், அசல் ஆவணங்கள் முழுமையாக சமர்பிக்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூன் 4 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 36வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day