சிவகாசியில் வெடி விபத்து - 5 பெண்கள் உட்பட 9 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இன்று வழக்கம் போல் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வெடி மருந்து உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த பயங்கர வெடிவிபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண் தொழிலாளர்கள் உட்பட 9 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சென்ற  போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர், ஆலையில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள்   மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 

Night
Day