சிதம்பரத்தில் 6-வது முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் மக்களவை தேர்தலில் விசிக சார்பில் தொல். திருமாவளவன், ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

தமிழகத்தில் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி களமிறங்குகிறது. இவ்விரு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு கூட்டம் சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் போட்டியிடப்போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிதம்பரம் தொகுதியில் 6வது முறையாக விசிக தலைவரும், எம்பியுமான தொல். திருமாவளவன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Night
Day