கொடைக்கானலில் பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் பனிமூட்டத்துடன் சாரல் மழையும் பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக காலை வேளையில் உறைபனியுடன், கடும் குளிர் நிலவி வந்தது. இந்நிலையில், கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்து வருவதால் வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படி வாகனங்கள் செல்கின்றன. சாரல் மழை காரணமாக தோட்ட பணிகளுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் வீடுகளிலேயே முடங்கினர்.

Night
Day