குடியிருப்பு பகுதிக்குள் உறங்கிக் கொண்டிருந்த காட்டு யானை - பொதுமக்கள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை ஒன்று படுத்து உறங்கியதை கண்டு மக்கள் அச்சமடைந்தனர். வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று சிங்காரா நீர் மின்நிலைய குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ஒரு வீட்டின் முன்பு இருந்த புல் மைதானத்தில் படுத்து உறங்கியுள்ளது. அதிகாலையில் அந்த வீட்டின் உரிமையாளர் கதவை திறந்தபோது, வீட்டின் முன்பு யானை படுத்து உறங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினரின் சத்தமிட அந்த யானை மெதுவாக எழுந்து காட்டு பகுதிக்கு சென்றது. தற்போது இதுகுறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Night
Day