தமிழகம்
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்புஈரோடு அருகே மூச்சு குழா?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே ஒற்றையானை தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சானமாவு வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது காட்டு யானை ஒன்று வெளியேறி, அருகே உள்ள விளை நிலத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனுமந்தபுரம் பகுதியில் மமத்தா என்ற இளம்பெண் இருசக்கரவாகனத்தின் பின்னால் அமர்ந்து வேலைக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த ஒன்றை யானை தாக்கியதில், இளம்பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையறிந்த கிராம மக்கள், யானை விரட்டக்கோரி, இளம்பெண்ணின் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் உத்தனப்பள்ளி - கெலமங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாழைப்பழம் தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழப்புஈரோடு அருகே மூச்சு குழா?...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தகோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாயொட்டி ?...