கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து - குழந்தை உள்பட 9 பேர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 2 கார்கள் மீது அரசு பேருந்து மோதிய கோர விபத்தில் பெண் குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவுப் பேருந்து, கடலூர் மாவட்டம்  திட்டக்குடி அடுத்த எழுத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன் சக்கரம் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக சென்ற பேருந்து, சாலையில் நடுவில் இருந்த தடுப்பை கடந்து எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த 2 கார்கள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், 2 கார்களும் அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போன நிலையில், அதில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார், மீட்பு பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்தவர்களை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஒரு பெண் குழந்தை உட்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரில் ஏற்பட்டது.

இதனிடையே விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பேருந்து ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



Night
Day