கழக நிர்வாகி மறைவு- புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை தெற்கு ஒன்றியக் கழக செயலாளர் திரு. A.V.சூரியநாராயணன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தஞ்சாவூர் மாவட்டம், முன்னாள் ஊராட்சிக்குழு தலைவர் மற்றும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவரும், அம்மாபேட்டை தெற்கு ஒன்றியக் கழக செயலாளருமான திரு. A.V.சூரியநாராயணன் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.

அன்பு சகோதரர் திரு. சூரியநாராயணனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.

varient
Night
Day