கழக நிர்வாகியின் மாமியார் மறைவு -புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் புறநகர் மாவட்டக் கழக மீனவர் அணி செயலாளர் எடப்பாடி ஏ.எல்.சுரேஷின் மாமியார் திருமதி கலைச்செல்வி ராஜேந்திரன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சேலம் புறநகர் மாவட்டக் கழக மீனவர் அணி செயலாளர் எடப்பாடி திரு.ஏ.எல்.சுரேஷின் மாமியார் திருமதி கலைச்செல்வி ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

தனது மாமியாரை இழந்து வாடும் அன்பு சகோதரர் எடப்பாடி திரு.ஏ.எல்.சுரேஷுக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day