எழுத்தின் அளவு: அ+ அ- அ
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று முதல் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் 3ஆம் தேதி 5 மாவட்டங்ககளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 5 வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.