எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மீனவர்கள் சிறைபிடிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மேலும் 12 ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து, கடந்த 10ம் தேதி கடலுக்கு சென்ற ராமேஸ்வர மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர். கடந்த 9ம் தேதி கடலுக்கு சென்ற 23 ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தது குறிப்பிடத்தக்கது. 

varient
Night
Day