உதயநிதி தாக்கல் செய்த மனுவில் திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிய உதயநிதி ஸ்டாலினின் மனுவில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சனாதனம் தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு  பீகார், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்களை ஒரே மனுவாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் உதயநிதி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சில திருத்தங்கள் இருப்பதால்  3 வாரங்களுக்கு பிறகு பட்டியலிடுவதாகவும், அதற்குள் மனுவில் திருத்தங்கள் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Night
Day