உதகை : வெளிமாவட்ட பதிவெண் கொண்ட உள்ளூர் மக்களுக்கு இ-பாஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வெளிமாவட்ட பதிவெண் கொண்ட உள்ளூர் மக்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டது. 

நீலகிரிக்கு வரும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு நாளை முதல் இ-பாஸ் வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, மாவட்டம் நிர்வாகம் ப்ரத்யேக இணையதள முகவரியை வெளியிட்டது. இந்நிலையில், வெளி மாவட்ட வாகன பதிவெண் வைத்திருக்கும் உள்ளூர் மக்களுக்கு உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களின் பதிவு சான்று, காப்பு சான்று மற்றும் புகை சான்று உள்ளிட்டவற்றை அளித்து இ-பாஸ்களை பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Night
Day