ஈரோடு: மக்களவை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி பொதுமக்கள் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வீட்டு மனை வழிகாட்டி மதிப்பீடு வழங்காததால், மக்களவை தேர்தலை புறக்கணிக்கப்போவதாகக்கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காராப்பாடி கிராமத்தில் சுமார் 411 வீட்டுமனைகள் உள்ளன. அதில் சுமார் 273 வீட்டு மனைகளுக்கு வழிகாட்டி மதிப்பீடு வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் வங்கியில் கடன் வாங்கவோ, சொத்துக்களை பிரித்து எழுதவோ, விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மக்களவை தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

varient
Night
Day