ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகளை ஊர் மக்கள் முற்றுகையிட்டனர். 


ஆண்டார் குளம் - இராமபுரம் ஊராட்சி பகுதியில்  40 ஆண்டுகளாக கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் ஒரு சிலருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்ட நிலையில், பலருக்கு பட்டா வழங்காமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், பட்டா வழங்காத வீடுகளை  அதிகாரிகள் இடிக்க வந்தனர்.  அப்போது, ஊர்மக்கள் மாற்று இடம் வழங்கி விட்டு வீடுகளை இடியுங்கள் என கூறி வாக்குவாதத்தில்  ஈடுபட்டனர். இதனையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

Night
Day