அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றே கரையை கடக்க வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மத்திய அரேபிய கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு கொங்கன் கடற்கரையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. ரத்தினகிரிக்கு வடமேற்கே சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கிழக்கு நோக்கி நகர்ந்து இன்றே ரத்தினகிரி மற்றும் டபோலிக்கும் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Night
Day