அரசு காப்பகத்தில் பாலியல் தொல்லை - மனநல ஆலோசகர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை அருகே அரசு காப்பகத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

நாகூரில் அன்னை சத்யா என்ற பெயரில் அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் குட் டச், பேட் டச் வகுப்பு எடுத்த மன நல ஆலோசகர் சத்யபிரகாஷ் என்பவர், 50 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காப்பக கண்காணிப்பாளர் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்யபிரகாஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day