அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சட்டப்பேரவையில் செந்தில் பாலாஜி இருக்கை மாற்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்ட நிலையில், அவரது இருக்கையை சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்திற்கு மாற்றி சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 8 மாதங்களாக சிறையில் உள்ள அவர் தனது இலாகா இல்லாத அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு நேற்று கடிதம் எழுதினார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை, ஆளுநர் ஏற்றுகொண்ட நிலையில், செந்தில் பாலாஜியின் இருக்கையை சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்திற்கு மாற்றி சட்டபேரவை செயலாளர் உத்தரவிட்டார். 

varient
Night
Day