எழுத்தின் அளவு: அ+ அ- அ
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் என்று பள்ளிகளில் முகக்கவசம் அணிவது குறித்து பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் கொரோனா பரவல் இருந்தாலும், அந்த அளவிற்கு தீவிரம் இல்லை என்றும், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக தெரிவித்துள்ளது.