இளையராஜாவின் குழுவில் பணியாற்றிய இசைக்கலைஞர் மறைவு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தன்னுடைய இசைக்குழுவில் பணியாற்றிய சகக் கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, இளைஞானி இளையராஜா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'தன்னுடன் ஆரம்பகாலத்தில் புல்லாங்குழல் வாசிக்கும் திறமை பெற்ற சுதாகர் என்பவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்ததாகவும், மறைந்த கலைஞரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் இளையராஜா குறிப்பிட்டுள்ளார். மறைந்த கலைஞர் வாசிக்கும் அந்த புல்லாங்குழல் இசை பாடலுக்கு மேலும் மெருகேற்றியது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ள இளையராஜா, அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

Night
Day