மதுரை : அண்ணன் மகனை கத்தியால் குத்திக் கொன்ற சித்தப்பா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மதுபோதையில் அண்ணன் மகனை கத்தியால் குத்திக் கொன்ற சித்தப்பாவை போலீசார் தேடி வருகின்றனர். பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த அய்யர்பாண்டி என்பவர் விவசாய கூலி தொழில் செய்து வந்தார். இவர் தனது சித்தப்பா பெரியகருப்பனுடன் நேற்றிரவு மது அருந்தும் போது இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறிய நிலையில் பெரியகருப்பன், அண்ணன் மகன் அய்யர்பாண்டியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அய்யர்பாண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய பெரியகருப்பனை தேடி வருகின்றனர். 

varient
Night
Day