க்ரைம்
ஆம்ஸ்ட்ராங் கொலை - மேலும் 2 பேரிடம் விசாரணை
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளி திருமலையின் உறவினர்கள் 2 பே?...
தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே காதலி சடலமாக மீட்கப்பட்ட நிலையில் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த திலீப் என்ற 20 வயது இளைஞரும், அதே பகுதியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி சுபிக்சாவும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சுபிக்ஷா மூங்கில் கொள்ளையில் சடலமாக கிடந்துள்ளார். அதன் அருகிலேயே திலீப்பும் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு சுபிக்ஷாவை கொலை செய்துவிட்டு திலீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாமோ? என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக குற்றவாளி திருமலையின் உறவினர்கள் 2 பே?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...