ஹமாசுடன் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹமாசுடன் போர் நிறுத்தம் என்ற பேச்சிற்கே இடமில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார். ஹமாஸ் வசம் மீதம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகளை மீட்கவும், மீண்டும் போர் நிறுத்தத்தை கொண்டு வரவும், எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து ஏமாற்றும் கோரிக்கைகளை தவிர வேறு எதுவும் வரவில்லை என்றும் அவற்றையெல்லாம் ஏற்க முடியாது என்றார். போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் செல்லாது என்றும் பாலஸ்தீனியர்களுக்கு தனிநாடு அந்தஸ்து தொடர்பான சர்வதேச ஆணைகளுக்கு இஸ்ரேல் ஒரு போதும் அடி பணியாது என்றும் குறிப்பிட்டார்.

Night
Day