ராஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் 67 பேர் உயிரிழப்பு - இதுவரை பலியானோர் எண்ணிக்கை 28,340 ஆக உயர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எகிப்தையொட்டிய காசாவின் எல்லை நகரான ராஃபாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 67 போ் உயிரிழந்தனா். இது தொடர்பாக காசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் தற்போது வரை 28 ஆயிரத்து 340 போ் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவா்களில் 12 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்டவா்கள் சிறுவர்கள் என்றும் இதுவரை 67 ஆயிரத்து 984 போ் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ராஃபா நகரில் நடத்திய தாக்குதலில் ஹமாசால் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 பணயக் கைதிகள் மீட்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

varient
Night
Day