விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து - பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்த செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ள பிரதமர், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார். மேலும் பலியானோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

varient
Night
Day