மத்திய அரசு கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டும் - முதலமைச்சர் அதிஷி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காற்று மாசுவை தடுக்க ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு  அமல்படுத்த வேண்டுமென டெல்லி முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் சுவாசபிரச்னை, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதலமைச்சர் அதிஷி, டெல்லியை போன்று உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் மத்திய அரசு கடும் கட்டுபாடுகளை நடைமுறை படுத்த வேண்டுமென கூறியுள்ளார். அதேபோல் காற்றின் தரம் சீராகும் வரை டெல்லியின் அண்டை மாநிலங்களில் பயிர்கழிவுகளை எரிப்பதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். 

varient
Night
Day