பீகார் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிக்கிறது - எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ஆச்சரியமளிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. வாக்குகள் எண்ணத் தொடங்கியது முதலே, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியது. ஆரம்பத்தில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே முன்னிலை வித்தியாசம் குறைவாக இருந்த போதிலும், நேரம் செல்லச் செல்ல இடைவெளி அதிகரித்தது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணி 204 தொகுதிகளிலும், மகாகத்பந்தன் கூட்டணி 33 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால் ஜேடியு, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் பிகாரில் ஆட்சியமைக்கவுள்ளது.

இந்நிலையில் பீகார் தேர்தல் தோல்வி தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தங்கள் கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிப்பதாகவும், ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை என வருத்தமுற்றார். காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற தங்கள் முயற்சிகளை இன்னும் திறம்பட செய்வதாக பதிவிட்டுள்ளார்.

Night
Day