இந்தியா
வரதட்சணை கேட்டு கணவன் துன்புறுத்தியதாக புகார் - கணவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்...
வரதட்சணை கேட்டு கணவன் துன்புறுத்தியதாக புகார் - கணவன் மீது நடவடிக்கை எடுக?...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வரை சிபிஐ கைது செய்துள்ளது. இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் உள்ளிட்ட பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தில் பள்ளியின் முதல்வர் இசானுல் ஹக் மற்றும் துணை முதல்வர் இம்தியாஸ் ஆகியோரை சிபிஐ கைது செய்துள்ளது. மேலும் 5 நபர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரதட்சணை கேட்டு கணவன் துன்புறுத்தியதாக புகார் - கணவன் மீது நடவடிக்கை எடுக?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 1 லட?...