இந்தியா
மாநிலங்களவையில் எதிர்கட்சிகள் கடும் அமளி
மாநிலங்களவையில் ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில?...
மக்களவைத் தேர்தல் பரப்பரையின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேடையிலேயே மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலில் உள்ள புஷாத் என்ற இடத்தில் பாஜக மக்களவை வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்போது திடீரென மயக்கம் அடைந்து சரிந்து விழுந்த போது, பின்னால் நின்ற பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தாங்கி பிடித்தனர். நாற்காலியில் அமர வைத்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். மேடையிலேயே நிதின் கட்கரி சரிந்து விழுந்த நிலையில் பொதுகூட்டம் ரத்து செய்யப்பட்டது.
மாநிலங்களவையில் ஆளும் கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில?...
ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையேற கடும் நேரக்கட்டுப்பாடு - ஆகஸ்ட் 1...