தேர்தல் நிதி பத்திர விவரங்களை சமர்பித்த எஸ்.பி.ஐ. வங்கி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வழங்க ஜூன் 30ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஸ்டேட் வங்கியின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் உடனடியாக சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனையடுத்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. எஸ்பிஐ அளித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட உச்சநீதிமன்றம் வரும் 15ஆம் தேதி வரை அவகாசம் வழங்கியுள்ளது.  

Night
Day