தரையில் 'ஊர்ந்து' சென்ற பனையேறி கெண்டை மீன்கள்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி யானமில் பனையேறி கெண்டை மீன்கள் சாலையில் வரிசையாக அணிவகுத்து ஊர்ந்து சென்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஏனாமில் பெய்து வரும் மழை காரணமாக ஆற்றில் இருந்து கரையேறிய நூற்றுக்கும் மேற்பட்ட பனையேறி கெண்டை மீன்கள் சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து சென்றன. இதனைக்கண்ட, அப்பகுதி மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இவ்வகையான மீன்கள் நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய தன்மை கொண்டவை என ஏனாம் மீன்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Night
Day