டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து - 2 பேர் காயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி ரோகினியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. ரோகினி பகுதியில் உள்ள டூப்ளக்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புவீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த, விபத்தில் 2 பேர் லேசான காயத்துடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day