டெல்லியை நோக்கி படையெடுக்கும் விவசாயிகளுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ஆதரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சுவாமிநாதன் ஆணையத்தின் படி குறைந்தபட்ச ஆதரவு விலை அமல்படுத்துவது தான் காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்தல் வாக்குறுதி  என ராகுல் காந்தி அறிவித்துள்ளது. 

குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி,  விவசாய சகோதரர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் எனவும், சுவாமிநாதன் ஆணையத்தின் படி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டபூர்வமாக வழங்கப்படும் என்பதை உத்திரவாதம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Night
Day