அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

3ம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நிஷான் பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையையாற்றினார்.

11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 மக்களவை தொகுதிகளுக்கு 3வது கட்டத் தேர்தல் இன்று காலை தொடங்கியது. இதில், குஜராத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளில் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் மீதமுள்ள 25 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காந்திநகர் தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போட்டியிடுகிறார். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட நிஷான் மேல்நிலைப்பள்ளியில் வாக்களிக்க பிரதமர் மோடி வருகை தந்தார். அவரை, பாஜக வேட்பாளரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரவேற்றார்.

பின்னர், வாக்குச்சாவடி மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தனது வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமையாற்றினார்.

Night
Day