குமாரபாளையம் ஜல்லிக்‍கட்டு போட்டி : காளைகளை தீரத்துடன் அடக்‍கிய வீரர்கள், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்‍கு பரிசு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொங்கல் திருவிழா மற்றும் கோயில்களில் நடைபெறும் ஆண்டுத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்‍கட்டு மற்றும் மாட்டு வண்டிய பந்தயங்கள் களைகட்டின.

நாமக்‍கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம். கல்லூரி அருகே, ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகளும், 300க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்‍கும், மாடுகளின் உரிமையாளர்களுக்‍கும் தங்கக்‍ காசு, மின்விசிறி உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. 

Night
Day